சொத்து வரி செலுத்தாவிட்டால் சீல் வைக்கப்படும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை தொடர்ந்து கட்டாமல் நிலுவை வைத்துள்ள தனியார் நட்சத்திர விடுதி மற்றும் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்து அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். 

சொத்து வரி செலுத்தாவிட்டால் சீல் வைக்கப்படும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை தொடர்ந்து கட்டாமல் நிலுவை வைத்துள்ள தனியார் நட்சத்திர விடுதி மற்றும் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்து அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். 

கொரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக தனி நபர்கள், தொழில் துறையினர் உள்ளிட்டவர்களின் பொருளாதாரம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த காரணத்தால் சென்னை மாநகராட்சிக்கு வரி செலுத்த வேண்டியவர்களுக்கு சில காலம் கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டு வரி செலுத்துவதற்கான நினைவூட்டல் மட்டும் மாநகராட்சி சார்பில் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் சில பெரு நிறுவனங்கள்,   நட்சத்திர விடுதிகள், மருத்துவமனைகள் கொரோனாவிற்கு முந்தைய கால வரி நிலுவையை தற்போது வரை செலுத்தாது காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இதனை கண்டித்து அந்த நிறுவனங்களின் முகப்பில் உடனடியாக பழைய சொத்து வரி நிலுவையை செலுத்த அறிவுறுத்தி பெரிய பேனர் ஒட்டப்பட்டுள்ளது. இது கொரோனா காலம் என்பதனால் சீல் வைக்கவில்லை, உடனடியாக செலுத்த வில்லை என்றால் அடுத்த முறை நிச்சயம் சீல் வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.