மேகதாது அணை குறித்து விவாதித்தால் வெளிநடப்பு - டெல்லியில் தமிழக அமைச்சர் துரைமுருகன் பேட்டி

காவரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதித்தால் வெளிநடப்பு செய்வோம்" என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை குறித்து விவாதித்தால் வெளிநடப்பு - டெல்லியில் தமிழக அமைச்சர் துரைமுருகன் பேட்டி

துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பு:

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது "மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமனறத்தில் நாளை விசாரணைக்கு வரவிருப்பதாக தெரிவித்தார்.  அது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும். தங்களுடைய வாதத்தில் நியாயம் இருப்பதால்  நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள காவரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் விவாதப் பொருளாக வைக்கப்பட்டிருந்தாலும், கூடுமான வரையில் கண்டிப்பாக எதிர்ப்போம் என்றார்.  தங்கள் எதிர்ப்பை மீறி மேகதாது குறித்து விவாதித்தால், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வோம்" என்று துரைமுருகன் கூறினார்.