''நாடாளுமன்ற தேர்தல் வரை கொஞ்சம் பொறுத்திருங்கள்'' - கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன்

''நாடாளுமன்ற தேர்தல் வரை கொஞ்சம் பொறுத்திருங்கள்'' -   கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன்

நாடாளுமன்ற தேர்தல் வரை கொஞ்சம் பொறுத்திருங்கள் என கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

தென்காசி மாவட்டம்  இலஞ்சியில் உள்ளதனியார் மண்டபத்தில் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் செயல்வீரர் கூட்டம் இன்று நடந்தது.

இந்த செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், தமிழக  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சருமான கேகே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பங்கேற்று நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரையாற்றி பேசுகையில்:-

” கலைஞருக்கு அடுத்தபடியாக நம் அனைவரையும் வழி நடத்தி செல்வது தளபதி ஸ்டாலின் தான். வருகிற நாடாளுமன்ற தேர்தல் வரை அனைவரும் பொறுமையாக பொறுத்திருங்கள். இந்த தேர்தல் மக்களுக்கு மட்டுமல்ல கட்சியினருக்கும் நல்லது நடக்கும் வகையில் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார்”,  என அமைச்சர் பேசினார்.

இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க   | அரசு மருத்துவமனையில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள்: வெளுத்து விலாசிய ககன் தீப் சிங் பேடி..!