ரயில் மோதி அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு போலீசார் விசாரணை

ரயில் மோதி அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு  போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ரயில் மோதி அடையாளம் தெரியாத முதியவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் விருதுநகர் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | அரளிப்பாறை மஞ்சுவிரட்டு அதிரடியாக ரெடியாகும் முன்னேற்பாடு

திருமங்கலம் அருகே கரிசல்பட்டி பகுதியில் இன்று மதியம் மதுரையில் இருந்து விருதுநகர் நோக்கி சென்ற ரயில் மோதி 50 லிருந்து 55 வயது மதிக்கத்தக்க முதியவர் உயிரிழந்ததாக விருதுநகர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது விருதுநகர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணை மேற்கொண்ட போது 50 வயது முதல் 60 வயது முதியவர் என தெரிய வந்தது. மேலும் கைலி கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார் எந்த ஊரைச் சேர்ந்தவர் யார் என தெரியவில்லை மேலும் இவர் ரயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது ரயில் மோதி உயிரிழந்தாரா?அல்லது தற்கொலை செய்து கொண்டாரா?என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தன.

மேலும் படிக்க| வங்காளதேசத்தை சார்ந்த நபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை 10 மாதங்களாக குறைத்தது - நீதிமன்றம்