முதலமைச்சர் ஆய்வு செய்த சாலையில் விதி மீறல்...கேள்விகளை அடுக்கி வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்!

முதலமைச்சர் ஆய்வு செய்த சாலையில் விதி மீறல்...கேள்விகளை அடுக்கி வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்!

தமிழக முதல்வர் ஆய்வு செய்த சாலை, விதிமுறைகளை மீறி செப்பனிடப்பட்டிருப்பதாக இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

ஆய்வு செய்த முதல்வர்:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து மேலராமன்புதூர் செல்லும் சாலை சில மாதங்களுக்கு முன்பு செப்பனிடப்பட்டது. செப்பனிடும் பணியை குமரிமாவட்டம் வந்திருந்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். 

இளைஞர்கள் வெளியிட்ட வீடியோ:

இந்நிலையில், தற்போது இந்த சாலை தரமற்றதாக உள்ளது எனவும் தலைமைச் செயலாளர் வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்ட விதியை மீறி செப்பனிடப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி இளைஞர்கள் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  

மேலும் படிக்க: https://malaimurasu.com/posts/cover-story/Kallakurichi-case---Bail-for-5-people

குற்றம் சாட்டிய இளைஞர்கள்:

இது தொடர்பாக அந்த இளைஞர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், புதிதாக செப்பனிடப்பட்ட சாலையின் உயரத்தை அளவீடு செய்து காட்டி தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே உள்ள பழுதடைந்த சாலையை அகற்றிவிட்டு சாலையின் உயரம் அதிகரிக்காத வகையில் செப்பனிட வேண்டும் என தலைமைச் செயலாளர் குறிப்பிட்ட நிலையில், அதற்கு முரணாக சாலை செப்பனிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். 

ஆளுங்கட்சியினர் முதல்வரை ஏமாற்றுகிறார்களா?:

மாநகராட்சி அதிகாரிகளும், ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிகளும் முதல்வரை ஏமாற்றுகிறார்களா? அல்லது அவர்களோடு சேர்ந்து முதல்வரும் பொது மக்களை ஏமாற்றுகிறாரா? என்ற கேள்வியையும் அந்த இளைஞர்கள் முன் வைத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.