விஜயகாந்த் விரைவில் மக்கள் பணியாற்ற வேண்டும்...வாழ்த்து சொன்ன துரை வைகோ!

விஜயகாந்த் விரைவில் மக்கள் பணியாற்ற வேண்டும்...வாழ்த்து சொன்ன துரை வைகோ!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரண உடல்நலம் பெற்று மக்கள் பணியாற்ற வேண்டும் என்று துரை வைகோ வாழ்த்தியுள்ளார். 

கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்:

தேமுதிகவின் நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 70வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவகத்தில் திருமதி  பிரேமலதா விஜயகாந்தை, மதிமுகவின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் படிக்க: https://www. malaimurasu.com/posts/cover-story/Plan-to-hike-transport-service-charges--OPS-condemns

செய்தியாளர்கள் சந்திப்பு:

இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, அரசியலை தாண்டி விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர் என்றும், அவர் பூரண உடல் நலம் பெற்று எழுச்சியுடன் விரைவில் மக்கள் பணியாற்ற வேண்டுமென்று தனது வாழ்த்தினை கூறினார்.

ஆவணப்படம்:

முன்னதாக, விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்த துரை வைகோ, அத்துடன் மதிமுகவின் தலைவர் வைகோவின் அரசியல் பயணம் குறித்து 75 நிமிட ஆவணப் படம் வெளியிடப்படவுள்ளதாக தெரிவித்தார். அதற்கான, அழைப்பிதழையும் திருமதி  பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடம் அளித்ததாக கூறினார்.