சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் லாக்கப் மரணம்.. 2 காவலர்கள் கைது - சிபிசிஐடி போலீசார் அதிரடி
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷின் லாக்கப் மரணம் தொடர்பாக, 2 காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் போலீஸ் விசாரணை க் கு அழைத்து செல்லப்பட்ட வி க்னேஷ் என்ற இளைஞர் மரணம் அடைந்தது தமிழ கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது உடலில் காயங் கள் இருப்பதா கவும், போலீசார் அடித்து துன்புறுத்தியதன் காரணமா கவே வி க்னேஷ் உயிரிழந்தார் என்றும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
இதனையடுத்து, வி க்னேஷின் மரணம் தொடர்பா க சிபிசிஐடி விசாரணை க் கு தமிழ க அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து, வி க்னேஷின் உடலில் 13 இடங் களில் காயங் கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
அதன் அடிப்படையில், இந்த வழ க் கு கொலை வழ க் கா க மாற்றப்பட்டு, 3 காவலர் கள் மீது கொலை வழ க் குப்பதிவு செய்து விசாரணை நடப்பதா க சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த வழ க் கு தொடர்பா க 12 பேரிடம் 10 மணி நேரத்திற் கும் மேலா க சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சென்னை தலைமைச் செயல க காலனி காவல்நிலைய எழுத்தர் முனாஃப், காவலர் பவுன்ராஜ் ஆ கியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.