நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம்... வீடியோ வெளியிட்ட கமல்ஹாசன்...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம்... வீடியோ வெளியிட்ட கமல்ஹாசன்...

கொரோனா தொற்று பாதித்து, சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். இது குறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நலமாக உள்ளேன். நான் நலம் பெற முக்கியமான காரணங்கள் இரண்டு. ஒன்று மருத்துவம், மற்றொன்று உங்களின் அன்பு. அதனால் தான் மீண்டும் வந்ததாக நம்பிக் கொண்டிருக்கிறேன். மருத்துவமனையில் இருந்தபோது கூட தொடர்ந்து அயராது உழைத்த மக்கள் நீதி மய்யத்தினருக்கு வாழ்த்துக்கள்.

உள்ளாட்சியில் சுயாட்சிக்காக குரல் கொடுத்து கொண்டிருப்பது மக்கள் நீதி மய்யம். கிராம சபை கூட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த சக்தி என்றால் மிகையாகாது. அது மட்டுமே அடையாளமாக இல்லாமல் நடக்க இருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலிலும் நாம் எதற்காக குரல் கொடுத்தோமோ அதை களத்தில் இறங்கி வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய ஆசை.

உங்கள் நடுவில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஓரம் தள்ளி வைத்துவிட்டு வேலையை பாருங்கள் கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து எப்படி பணிபுரிந்தீர்களோ அதே துணிச்சலோடு மிகவும் ஜாக்கிரதையாக பணியைச் செய்ய வேண்டும் உங்கள் நலன் எனக்கு மட்டுமல்ல நாட்டிற்கும் முக்கியம் கொரோனா தொற்று நீங்கி விட்டது அல்லது போய்விடும் என்ற அஜாக்கிரதையில் இருக்கக்கூடாது என்பதற்கு முன்னுதாரணம் நான். எனவே  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உழைப்பு மட்டுமல்ல முன் ஜாக்கிரதை தற்காப்பு அவசியம் என தெரிவித்துள்ளார்.