பேருந்து - டேங்கர் லாரி - இருசக்கர வாகனம் அடுத்தடுத்து மோதி 4 பேர் உயிரிழப்பு...!

பேருந்து - டேங்கர் லாரி - இருசக்கர வாகனம் அடுத்தடுத்து மோதி 4 பேர் உயிரிழப்பு...!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அரசு பேருந்து, டேங்கர் லாரி மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 

திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு சொகுசு பேருந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச் சாலையில் பாதரகுடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்து ஓட்டுநர் முயற்சித்த போது, சாலையோரம் நின்ற டேங்கர் லாரி மீது பேருந்து மோதியது. அது அப்படியே மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது. இதில், நடத்துனர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்த நிலையில், 26 பேர் படுகாயமடைந்தனர்.

இதையும் படிக்க : அரசு வேலைக்காக காத்திருப்போர் பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு அரசு...!

இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்து தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.