தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, ஜனவரி 10ம் தேதி வரை ஊரடங்கு நீடித்து முதலமைச்சர் உத்தரவு...

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, ஜனவரி 10ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, ஜனவரி 10ம் தேதி வரை ஊரடங்கு நீடித்து முதலமைச்சர் உத்தரவு...

தமிழகத்தில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பண்டிகைக் காலங்களில் தொற்று பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 10ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 10ம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுவதாகவும்.,மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி மறுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள், சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், திரையரங்குகள், பொழுதுபோக்கு கேளிக்கை பூங்காக்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டுமே செயல்பட அனுமதி அளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது..

9 முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருமணம் மற்றும் அதனை சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், இறப்பு சார்ந்த துக்க நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.,

உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள்  50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.பொது போக்குவரத்து பேருந்துகளில் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதாகவும்.,

மெட்ரோ இரயிலில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.திறந்த வெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும் என்றும்.,

உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50 சதவீத பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளிக்கப்படுவதாகவும் அழகு நிலையங்கள், சலூன்கள் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.