தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டி, எண்ணமங்கலம், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்ட்படது.

இந்த நிலையில், மாலை வேளையில் பரவலாக மழை பெய்தது. இதன் காரனமாக அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்த்னர்.

இதேபோல கர்நாடகாவின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த தொடர் மழையினால் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கெலவரப்பள்ளி மற்றும் கே.ஆர்.பி அணையிலிருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.