விரைவில் படுக்கை வசதிகளுடன் வந்தே பாரத்!!

விரைவில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் மல்லையா தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வந்தே பாரத் மெட்ரோ ரயில் இந்த ஆண்டுப் இறுதிக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும், சென்னையில் இருந்து டெல்லிக்கு விரைவில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், விரைவில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும் என கூறியதுடன், காவி வண்ணத்தில் புதிய வந்தே பாரத் ரயில்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ரயில்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும் எனவும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் சாதாரண நாட்களில் கூட கூட்டம் அலை மோதுவதால், கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க || "நாங்கள் போட்ட சாலையில், திமுக திட்டத்திற்கு கோலமா?" ஆவேசப்பட்ட பாஜக பிரமுகர்!!