வெற்றிக்கு நன்றி தெரிவித்த வைகோ...!!!

வெற்றிக்கு நன்றி தெரிவித்த வைகோ...!!!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் களம் கண்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் மாபெரும் வெற்றி பெற்று இருப்பது முன்பே எதிர்ப்பார்த்ததுதான் எனக் கூறியுள்ளார் வைகோ.

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் களம் கண்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்ற நிலையில் மதிமுக தலைவர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிக்கையில் அன்புச் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இருபது மாதகால நல்லாட்சி புகழ் மகுடத்தில் ஒளி வீசும் வைரமாக ஈரோடு கிழக்குத் தொகுதி வெற்றி அமைந்திருக்கிறது எனக் கூறியுள்ளார் வைகோ.

மேலும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை தந்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.  அதனோடு தந்தை பெரியார் பிறந்த மண்ணில் பெரு வெற்றிக்கு உழைத்திட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் மதிமுக சார்பில்  பாராட்டுக்களையும், நன்றியையும்  தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:  வடிவேலுக்கு போலி டாக்டர் பட்டம்... நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு!!!