கொரோனா இறப்பை குறைக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்.! -அமைச்சர் மா. சுப்பிரமணியன்.! 

கொரோனா இறப்பை குறைக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்.! -அமைச்சர் மா. சுப்பிரமணியன்.! 

தமிழகத்தில் தடுப்பூசி தயாரிப்பு மையத்தை துவங்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீரிக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் தெரிவித்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை அசோக் நகர் தனியார் பள்ளியில் முடி திருத்துபவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்திற்கு 1.77 கோடி தடுப்பூசிகள் கிடைத்துள்ளது. இதில் இன்று காலை நிலவரப்படி 7,77,910 தடுப்பூசுகள் கையிருப்பு உள்ளது. இதே போன்று, டெல்லி யணத்தின் பொழுது, தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதற்கான விழிப்புணர்வு மிக சிறப்பாக நடைபெற்றது வருகிறது என பிரதமர் பாராட்டுயதாகவும், தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி தாராளமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிப்பு மையம் துவங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பரிசீலிப்போம் என ஒன்றிய அமைச்சர் தெரிவித்ததாகவும் தெரிவித்தார். மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து துவங்க வேண்டும் என 13கோரிக்கைகள் வைக்கப்பட்டது. கோரிக்கை மனுக்கள் அனைத்தையும் பரிசீலித்து விரைவில் பதில் கூறுவதாக தெரிவித்தனர் என்று கூறினார். 

அதோடு, 3ம் அலையை பொறுத்தவரை இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 3ம் அலையில் இறப்பு பொறுத்தவரை அங்கு குறைவாகவே உள்ளது. அங்கு அவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் இறப்பு குறைந்துள்ளது. எனவே நாம் தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொள்ள வேண்டும். 3ம் அலையை எதிர்கொள்ள தமிழகத்தில் அணைத்து கட்டமைப்புகளும் தயார் நிலையில் உள்ளது. ஜிகா பொறுத்தவரை ஒருவருக்கு கூட தமிழகத்தில் இல்லை. கேரளாவில் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.