கும்பகோணம் தம்பதி கொலை: இறந்த மகனுக்கு போன் போடச் சொல்லும் மனநலம் பாதிக்கப்பட்ட தாய்!
கும்பகோணம் அருகே ஆணவக் கொலை செய்யப்பட்ட மோகனின் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் தன் மகன் உயிரிழந்தது தெரியாமல் அவர் விரைவில் வந்து விடுவார் எனப் பேசும் காட்சி காண்போர் நெஞ்சை கரைப்பதாக உள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த மோகன் என்பவரும் கும்பகோணம் அருகே துலுக்கவேலி கிராமத்தை சேர்ந்த சரண்யா என்பவரும் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்துபெண்ணின் சகோதரர் மற்றும் மைத்துனரும் சேர்ந்து புதுமண தம்பதியினரை விருந்துக்கு அழைத்து கொடூரமாக கொலை செய்தனர். மகன் மற்றும் மருமகள் கொலை குறித்து மனநலம் பாதிக்கப்பட்ட தாயிடம் சொன்ன போது, அதை உணராமல் அந்த தாய் தன் மகன் மனைவியுடன் வெளியில் சென்றுள்ளதாகவும், விரைவில் வந்து விடுவான் எனவும் கூறியுள்ளார்.
மேலும், தன் மகனுக்கு போன் போடச் சொல்லி வெகுளியாய் அந்த தாய் பேசும் வீடியோ காட்சி வெளியாகி காண்போரை கண் கலங்க வைத்துள்ளது. இவர் மனநல சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற போது அங்கு செவிலியராக பணியாற்றிய சரண்யாவை மோகன் காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது...