தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு பாடுபடுவேன் - எல்.முருகன்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு பாடுபடுவேன் - எல்.முருகன்
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 15 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 28 இணை அமைச்சர்கள் என மொத்தம் 43 பேருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 
 
நேற்று குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகனும் பதவியேற்றுக் கொண்டார். இணை மந்திரியாக பதவியேற்றுக் கொண்ட எல். முருகனுக்கு மீன்வளம், கால்நடை, பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
 
தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற பின், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக பாடுபட போவதாக தெரிவித்தார்.