அண்ணா, ஜெயலலிதா...எடப்பாடி யாருக்கு உண்மையாக இருந்திருக்கிறார்? உதயநிதி கேள்வி!

அண்ணா, ஜெயலலிதா...எடப்பாடி யாருக்கு உண்மையாக இருந்திருக்கிறார்? உதயநிதி கேள்வி!

பாஜகவிடம் அடிமையாக இருக்கும், எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்தால் வாய்க்கு வந்தபடி பேசி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.

ஈரோடு சூரம்பட்டி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொணடார். அப்போது பேசிய உதயநிதி, பாஜகவிற்கு அடிமையான கட்சி தான் அதிமுக என்று சாடி பேசிய அவர், ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென மக்களிடம் கேட்டுக்கொண்டார். 

இதையும் படிக்க : திமுகவுக்கு எதிராக வெடிகுண்டு...பகிரங்க மிரட்டல் விடுத்த கர்னல் பாண்டியன்...!

தொடர்ந்து பேசிய அவர், ஓபிஎஸ் விரைவில் ஆளுநராக வாய்ப்புள்ளது எனவும், ஈபிஎஸ் விரைவில் பாஜக தலைவராகி விடுவார் என்றும் விமர்சித்தார். சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை பெற்ற எடப்பாடி பழனிசாமி, மீசை குறித்து பேச அருகதை இல்லை என கூறியவர், மத்திய அரசையும் பாஜகவையும் சாடி வாக்கு சேகரித்தார்.