இன்று யு.பி.எஸ்.சி தேர்வு: மெட்ரோ ரயில் காலை 5.30 மணி முதல் இயக்கப்படும்

இன்று யு.பி.எஸ்.சி தேர்வு நடைபெற உள்ளதால் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் காலை 7 மணிக்கு பதிலாக காலை ஐந்தரை மணி முதல் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்று யு.பி.எஸ்.சி தேர்வு: மெட்ரோ ரயில் காலை 5.30 மணி முதல் இயக்கப்படும்

இன்று யு.பி.எஸ்.சி தேர்வு நடைபெற உள்ளதால் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் காலை 7 மணிக்கு பதிலாக காலை ஐந்தரை மணி முதல் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்று யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்கும், தேர்வர்களுக்கு வசதியாக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தனது மெட்ரோ ரயில் சேவைகளை விரிவாக்கம் செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, வழக்கம் போல் காலை 7 மணிக்கு துவங்கும் மெட்ரோ சேவைகள் இன்று ஒரு நாள் மட்டும், காலை ஐந்தரை மணி முதல் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரவு 11 மணி வரை இயக்கப்படும் எனவும், நாள் முழுவதும் உச்ச நேரம் இல்லாமல் 10 நிமிடங்கள் இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ள சென்னை மெட்ரோ நிர்வாகம், முதல் மற்றும் கடைசி ரயில் நேரங்கள் வார நாள் கால அட்டவணை போலவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.