உ.பி. வன்முறைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- குஷ்பு ட்வீட்

உத்தர பிரதேசத்தில் வன்முறைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் நடிகையும் பாஜக நிர்வாகியுமான  குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.

உ.பி. வன்முறைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- குஷ்பு ட்வீட்

உபி வன்முறை குறித்து  நடிகை குஷ்பு  துனிச்சலாக  தமது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி 8 பேரை கொன்றது கடுமையான குற்றம் என குறிப்பிட்டுள்ளார் அவர்,

எந்த விதத்திலும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார். இதில்  தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி  உள்ள குஷ்பு, மனித உயிரை விட வேறு எதுவும் முக்கியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.