700 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்த இரண்டு பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே எரிசாராயம் பதுக்கி வைத்திருந்த இரண்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

700 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்த இரண்டு பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சத்தியசீலன் தலைமையில் போலீசார் சாராய ரெய்டு நடத்தினர். அப்போது பைத்தந்துறை கிராமத்தில் மணி என்பவருடைய விவசாய வயலில் நின்றிறுந்த இருவர், போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்தனர்.

அவர்களை விரட்டி பிடித்த போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் சின்னசேலம் அருகே உள்ள பைத்தந்துறை கிராமத்தைச் சேர்ந்த துடுக்கு சேகர் மற்றும் சங்கராபுரம் வட்டம் விரியூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோசப் என்பதும்  தெரியவந்தது. இவர்கள் இருவரும் போலி மது தயாரிக்க 700 லிட்டர் எரிசாராயத்தை கரும்பு வயலில் பதுக்கி வைத்து இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் இருவர் மீதும் வழக்குபதிவு செய்த கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.