திருப்பூர் அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு - 3 பேர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு...

திருப்பூர் அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு - 3 பேர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு...

திருப்பூர் மாவட்டம், வித்யாலயம் அடுத்த கொத்துக்காடு தோட்டம் பகுதியில் சாய ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலையில் கழிவு தேக்க தொட்டியில் ராமகிருஷ்ணன், வடிவேல் மற்றும் நாகராஜ் ஆகிய 3 பேரும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வடிவேலு என்பவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருயை சத்தத்தை கேட்டு தினேஷ் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் காப்பாற்ற சென்றுள்ளனர்.

அப்போது விஷவாயு தாக்கி வடிவேலு மற்றும் காப்பாற்ற சென்ற நிறுவனத்தின் மேலாளர் தினேஷ் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றர். இதனிடையே இறந்தவர்களில் உடலை வாங்க எதிர்ப்பு தெரிவித்து அவர்களுடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.