இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்...!

திருப்பனந்தாளில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்

இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்...!

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள், ஊருடையப்பர் கோயில் எதிரில் கும்பகோணத்தில் இருந்து சென்னை சென்ற அரசு பேருந்தும் எதிரில் விருத்தாசலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு பேருந்தும் குறுகலான வளைவு பாதையில் நேருக்கு நேர்  மோதிக்கொண்டன. 

இதில் ஓட்டுநர் வீர முரசு என்பவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இரண்டு பேருந்துகளிலும் வந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினர். மேலும், மனோகரன் என்பவரது வீட்டு வாசல் பகுதியும் சேதம் அடைந்தது. இந்த விபத்து குறித்து திருப்பனந்தாள் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.