மதுரையில் பெண் சிசு கொலை வழக்கில் திருப்பம்..! சிசுவின் சடலம் தோண்டி எடுப்பு..!

பிரேத பரிசோதனையில் உண்மைகள் புலப்படும் என தகவல்..!

மதுரையில் பெண் சிசு கொலை வழக்கில் திருப்பம்..! சிசுவின் சடலம் தோண்டி எடுப்பு..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெண்சிசு உயிரிழந்தது தொடர்பாக, குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உசிலம்பட்டி அருகேயுள்ள பெரியகட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முத்துப்பாண்டி - கௌசல்யா தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த டிசம்பர் 21ஆம் தேதி மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தை, உயிரிழந்ததாக கூறி, வீட்டின் அருகிலேயே புதைத்துள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களது வீட்டுக்கு சென்று புதைக்கப்பட்ட பெண் சிசுவின் சடலத்தை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.