” உண்மை எந்நாளும் வெல்லும் “ - ராகுல்காந்தி பேட்டி.

” உண்மை எந்நாளும் வெல்லும் “ - ராகுல்காந்தி பேட்டி.

உண்மை எந்நாளும் வெல்லும் என உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி மீதான 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்னிலையில் இந்த உத்தரவை அடுத்து டெல்லியில் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்த அவர்:-

தனது பாதையில் தெளிவாக இருப்பதாகவும் பேரன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி எனவும் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்தின் வெற்றி எனக் கூறினார். எது வந்தாலும் தனது கடமை அப்படியே தொடரும் என ராகுல்காந்தி ட்வீட் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க   | ராகுல்காந்தியின் தண்டனை நிறுத்தி வைப்பு... வழக்கு கடந்து வந்த பாதை!!