லாரி- ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து... 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

ஈரோடு அருகே லாரியும், ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காரின் டிரைவர் உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.                                          

லாரி- ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து... 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் சோளங்கபாளையம் அருகேயுள்ள  முத்துக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர்கள், 7 பேர் ஆம்னி வேனில் பழனி கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தனர்.

அப்போது பாரப்பாளையம் என்ற இடத்தில் எதிரே வந்த லாரியின் மீது, 7 பேரும் சென்ற ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட ஆம்னி வேன் இருந்த  தெய்வானை, அருக்காணி, புவனேஸ்வரி, தேன்மொழி ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இறந்த 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  பெருந்துறையில் உள்ள  ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் காயமடைந்த குமரேசன், மோகன்குமார் ஆகிய இருவரும், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்த சிவகிரி போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.