வியாபாரிகளை ஏமாற்றும் மத்திய பட்ஜெட்...விக்கிரமராஜா பேட்டி!

வியாபாரிகளை ஏமாற்றும் மத்திய பட்ஜெட்...விக்கிரமராஜா பேட்டி!

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வியாபாரிகளை ஏமாற்றும் வகையில் உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.

வேலுர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக வேலூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்ற பின்னர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதையும் படிக்க : அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை தான்...வானிலை மையம் சொன்ன தகவல்!

அப்போது பேசிய அவர், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக வருகிற மே 5ஆம் தேதி ஈரோட்டில் 
வணிகர் தின மாநில மாநாடு, வணிகர் உரிமை முழக்க மாநாடாக நடைபெற உள்ளது. வேலூரில் இருந்து 7000 வணிகர்கள் அந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். தொடர்ந்து பேசிய அவர், ஜிஎஸ்டி மூலமாக பல்லாயிரம் கோடிகளை வசூலித்து தரக்கூடிய வணிகர்களுக்கு, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வியாபாரிகளை ஏமாற்றும் வகையில் உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.