ஒகேனக்கலில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்.. படகு சவாரி செய்தும் அருவியில் குளித்தும் உற்சாகம்!!

ஒகேனக்கலில்  குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தும் அருவியில் குளித்தும் உற்சாகமடைந்தனர்.

ஒகேனக்கலில்  குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்.. படகு சவாரி செய்தும் அருவியில் குளித்தும் உற்சாகம்!!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தலம் தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம் 

கோடைக்காலம் தொடங்கியதிலிருந்தே ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.  இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கடந்த வாரத்தை விட இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள்  ஒகேனக்கல்லில் குவிந்தனர்  பரிசலில் சவாரி செய்து இயற்கை அழகை ரசித்த சுற்றுலா பயணிகள், ஆயில் மசாஜ் செய்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.