” மதவெறி கொண்ட பாஜகவை வீழ்த்துவதே இந்தியாவின் பன்முகத் தன்மையை காத்திடும்” - மு.க.ஸ்டாலின்.

” மதவெறி கொண்ட பாஜகவை வீழ்த்துவதே  இந்தியாவின் பன்முகத் தன்மையை காத்திடும்” - மு.க.ஸ்டாலின்.

மதவெறி கொண்ட பாஜகவை வீழ்த்துவது ஒன்றே இந்தியாவின் பன்முகத் தன்மையை காத்திடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கலைஞர் கோட்டம் திறப்பு விழா குறித்து பெருமிதம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் நாட்டைக் காத்திட மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நிற்க வேண்டிய தருணம் இது எனவும்,  மதவெறி கொண்ட பாஜகவை வீழ்த்துவது ஒன்றே இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காத்திடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதற்கான முன்னெடுப்பை பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மேற்கொண்டிருப்பதாகவும், ஜூன் 23-ஆம் தேதி பாட்னாவில் நடைபெறவுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில், தாம் பங்கேற்க உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

இந்த ஜனநாயக விழுமியங்களை காப்பதற்கான எதிர்கட்சிகளின் முன்னெடுப்பு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் நல்ல விளைவை தரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.