வெகு விமர்சையாக நடந்த ஆவணி தர்ம திருவிழா!!!

கீழச்சிவந்திபுரம் நாராயணசுவாமி திருகோயில் ஆவணி தர்ம திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

வெகு விமர்சையாக நடந்த ஆவணி தர்ம திருவிழா!!!

திருநெல்வேலிஅம்பாசமுத்திரம் வட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள கீழச்சிவந்திபுரம் சிரீமன் நாராயணசுவாமி திருக்கோயில் ஆவணி தர்ம திருவிழாவையொட்டி 5 கி.மீ. தொலைவுக்கு சிறுமிகளின் கோலாட்ட ஊர்வலமும், சந்தக்குட ஊர்வலமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கீழச்சிவந்திபுரத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிரீமன் நாராயண சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆவணி  தர்ம திருவிழா 10 நாள்கள் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், உகப்படிப்பு பணிவிடை நடைபெற்றது. 8 ஆம் துறை நாராயண சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடினார். 9 ஆம் திருநாளில் ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது.

தொடர்ந்து 10 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை சிவந்திபுரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள பாபநாசத்தில் இருந்து தீர்த்தக்குடம், பால்குடம், சந்தனக்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக மீண்டும் சிவந்திபுரத்திற்கு வந்தனர். அப்போது 50-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கோலாட்டம் ஆடியும், சிறுவர்கள் சண்டைமேளம் இசைத்தும் வந்ததை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்தோடு பார்த்தனர். அய்யா குதிரை வாகனத்தில் அருள்பாலித்தார். சந்தனக்குடம் கோயிலை அடைந்ததும் உச்சிப்படிப்பு பணிவிடை நடைபெற்றது.

மாலையில் உகப்படிப்பு பணிவிடையும், 8 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் நடைபெற்றதுஇரவில் நாக வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் சிவந்திபுரம், ஆறுமுகம்பட்டி, அடையக்கருங்குளம், விக்கிரமசிங்கபுரம், அம்பலவாணபுரம், வராகபுரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.