திருநெல்வேலி எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடி மாற்றம்...காரணம் இதோ!

திருநெல்வேலி எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடி மாற்றம்...காரணம் இதோ!

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பனீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள உத்தரவில், தூத்துக்குடி மாவட்ட எஸ்பியான பாலாஜி சரவணனுக்கு, திருநெல்வேலி மாவட்ட எஸ்பியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது எனவும், அதேசமயம், திருநெல்வேலி மாவட்ட எஸ்பியாக இருந்துவரும் சரவணன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்படுகிறார் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : 6 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு...EMIS தளம் மூலம் வினாத்தாள் அனுப்ப முடிவு!

முன்னதாக, திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களைப் பிடுங்கிய குற்றச் சாட்டில் அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். தற்போது இது தொடர்பான விவகாரத்தில் தான் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.