குவியும் சுற்றுலாப் பயணிகள் - கடும் போக்குவரத்து நெரிசல்!

கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி, கடந்த 2 நாட்களாக ஏராளமான மக்கள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். மோயர் சதுக்கம் , பைன் மரக்காடுகள், தூண் பாறை, நட்சத்திர ஏரி  உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதுவதால், கொடைக்கானல் மூஞ்சிக்கல், ஏரி சாலை, வெள்ளி நீர் வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.