"பாஜகவை வீழ்த்த விருப்பமுள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும்" சீதாராம் யெச்சூரி! 

"பாஜகவை வீழ்த்த விருப்பமுள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும்" சீதாராம் யெச்சூரி! 

இந்தியாவை பாதுகாக்கவும், பாஜகவை வீழ்த்தவும் விருப்பமுள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும்  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும்,முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நேரில் சந்தித்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீதாராம் யெச்சூரி, மரியாதை நிமித்தமாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியதாகவும் சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக தேர்தல் முடிவுகள் பற்றியும் மதசார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பு குறித்தும் ஆலோசித்துள்ளதாக தெரிவித்தார்.

தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டம் எப்போது நடைபெறும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இதற்கான ஏற்பாடுகள் ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருவதாகவும் அதற்காக பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார். மேலும்  இந்தியாவை பாதுகாக்கவும், பாஜகவை வீழ்த்தவும் விருப்பமுள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க:'ஒற்றை பதவி'க்கு அடித்துக்கொள்ளும் மதிமுக நிர்வாகிகள்!