தூத்துக்குடி: திருமண நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து நபா் ஒருவா் படுகாயம்!! பெரும் பரபரப்பு

தூத்துக்குடியில் திருமண நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து கொண்டிருந்த நபா் மீது  தீடிரென பட்டாசு வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி: திருமண நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து நபா் ஒருவா் படுகாயம்!! பெரும் பரபரப்பு

தாளமுத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிங்கார செல்வம் இவர் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் கோவில் திருவிழாக்களில் பட்டாசு வெடிக்கும் தொழில் செய்து வருகின்றார்.

இந்நிலையில், இவா், தருவைக்குளம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், தனது இருசக்கர வாகனத்திலும் கட்டி வைத்து பட்டாசு வெடித்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென பட்டாசில் இருந்து வெளியான தீப்பொறிகள் அவரது மீது விழுந்து வெடித்தது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வெடி விபத்தில் இருசக்கர வாகனம் உள்ளிட்ட 3 வீடுகள் சோதமடைந்தது. வெடி விபத்து குறித்து காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர்.