திருவாரூர்: மருத்துவர்கள் அலட்சியத்தால் இளம்பெண் உயிரிழந்ததாக புகார்!!

திருவாரூர் அருகே மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

திருவாரூர்: மருத்துவர்கள் அலட்சியத்தால் இளம்பெண் உயிரிழந்ததாக புகார்!!

தஞ்சையை சேர்ந்த பரகத்துல்லா என்பவரின் மனைவி பர்வீன் பானு. கர்ப்பிணியாக இருந்த இவர் திருவாரூர் மாவட்டம் தேவர்கண்டநல்லூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து வந்தார்.

இளம்பெண்ணிற்கு இதயம் தொடர்பாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்ததால், பிரசவ வலி வருவதற்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்க அரசு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதன்பேரில் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 11ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

தாயும், சேயும் நலமாக இருந்த நிலையில் இன்று பர்வீன் பானுவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதுகுறித்து உறவினர்கள் மருத்துவரிடம் தெரிவித்தும், அரை மணி நேரமாக மருத்துவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து, மயக்கமடைந்த இளம்பெண் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்றபோது  உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.