திருவண்ணாமலை: 50 அடி கிணற்றில் தவறி விழுந்த 90 வயது மூதாட்டி!!

திருவண்ணாமலை: 50 அடி கிணற்றில் தவறி விழுந்த 90 வயது மூதாட்டி!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தை சுருட்டை மகன் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள விவசாய கிணறு உள்ளது. அதில் 30 அடி அளவிற்கு  தண்ணீர் இருந்துள்ளது. 

இந்நிலையில், சந்திரா என்கிற 90 வயது மூதாட்டி அந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அந்த நேரம் பார்த்து அந்த பகுதியில் ஆள் நடமாடம் இல்லாத காரணத்தினால் மூதாட்டி சுமார் இரண்டு மணி நேரமாக உயிருக்கு போராடி கொண்டிருந்துளார்.

இதன் பிறகு பொது மக்கள் கொடுத்த தகவலின் பெயரில் செங்கம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி மூதாட்டியை உயிருடன் மீட்டெடுத்து உறவினரிடம் ஒப்படைத்தனர்.  இதனை தொடர்ந்து உறவினர்கள் மூதாட்டியை செங்கம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நலமுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.