திருவள்ளூா்: குடிசை வீட்டில் தீ விபத்து.. சிலிண்டர் வெடித்து இளைஞர் படுகாயம்!!

திருவள்ளூா்: குடிசை வீட்டில் தீ விபத்து.. சிலிண்டர் வெடித்து இளைஞர் படுகாயம்!!

திருவள்ளூா் மாவட்டம்  திருத்தணி அருகே குடிசை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு சிலிண்டர் வெடித்ததால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருத்தணியை அடுத்த சிவாடா கிராமத்தைச் சேர்ந்த பழனி  ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவா் வழக்கம் போல் பணிக்கு சென்ற நிலையில், அவரது குடிசை வீடு திடீரென மளமளவென  தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது.

தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினா், தீ அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதில், தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தனுஷ்  என்ற இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.