சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்...கடும் நெரிசலில் சிக்கி அவதி!

தொடர் விடுமுறையை ஒட்டி ஏராளமானோர் தங்களது சொந்த ஊருக்கு செல்வதால் செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்லும் மக்கள் கார் மற்றும் பேருந்துகள் மூலம் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர்.

இதன் காரணமாக, ஆத்தூர் சுங்கச்சாவடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.