அதிமுக -பாஜக இடையே முரண்பாடுகள் இல்லை -செங்கோட்டையன் பேட்டி 

அதிமுக -பாஜக இடையே முரண்பாடுகள் இல்லை -செங்கோட்டையன் பேட்டி 

அதிமுக -பாஜக இடையே முரண்பாடுகள் இல்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான நிகழ்வு நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இந்நிகழ்வில் கலந்துகொண்டு படிவங்களை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.  

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் "கூட்டணி குறித்து நாங்கள் தெளிவாக உள்ளோம். அதிமுக பாஜக இடையே முரண்பாடுகள் இல்லை, நேர சூழல் காரணமாக பிரதமரால் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க முடியவில்லை" என தெரிவித்துள்ளார்

தொடர்ந்து காவிரி டெல்டா பகுதி அதிமுக ஆட்சியில்தான் பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக   அறிவிக்கப்பட்டது என்றும் விவசாயிகளுக்கு பாதுகாப்பான அரசாக அதிமுக இருந்தது என்றும் கூறியுள்ளார். 

மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் பங்கேற்காதது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.