முழு பூசணியை பிடி சோற்றில் மறைக்கும் வேலை - திருமாவளவன்...

சாதி மத சிக்கலுக்கு தீர்வு காண பெரியாரையும், அம்பேத்கரையும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் படிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

முழு பூசணியை பிடி சோற்றில் மறைக்கும் வேலை - திருமாவளவன்...

புரட்சியாளர் சேகுவேராவின் நினைவு தினத்தையொட்டி சென்னை அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவரது படத்திற்கு திருமாவளவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,,  2-வது முறையாக திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கூறினார்.  முக்கிய பொறுப்புகளை ஏற்றுள்ள துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் படிக்க | குரங்கை மனிதன் என அழைக்கலாமா? ராஜராஜ சோழன் சர்ச்சை குறித்து ரா. சரத்குமார்...

அப்போது, சாதி வர்ணத்தை மறந்து விடவேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத்தின் கருத்து குறித்து பதிலளித்த அவர், அது முழு பூசணியை பிடி சோற்றில் மறைக்கும் வேலை என்றார்.

சாதியும். மதமும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை இழிவுபடுத்தி வருகிறது என்பதை மோகன் பகவத் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். 

மேலும் படிக்க | தென்காசி: தீண்டாமையால் பிஞ்சுகளை ஒதுக்கிய பெரியவர்களை கைது செய்ய வேண்டும்.. திருமாவளவன் காட்டம்..!

அவர் பேசியதில் முக்கிய புள்ளிகள்...

பெரியாரையும், அம்பேத்கரையும் மோகன் பகவத் படிக்க வேண்டும்

மோகன் பகவத் பேச்சு முழு பூசணியை பிடி சோற்றில் மறைக்கும் வேலை 

சாதியும், மதமும் உழைக்கும் மக்களை இழிவுபடுத்தி வருகிறது

சமத்துவத்தை நிலைநாட்ட மோகன் பகவத் முன் வரவேண்டும்

திமுக தலைவராக 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து 

துரைமுருகன், டி.ஆர்.பாலு,  கனிமொழி   உள்ளிட்டோருக்கும் வாழ்த்து