வெறும் கையால் கழிவுகளை அகற்றும் அவலம்!

வெறும் கையால் கழிவுகளை அகற்றும் அவலம்!

செங்கம்  தேங்கியுள்ள கழிவுநீரை பேரூராட்சி ஊழியர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் கையால் சுத்தம் செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம்  செங்கம் பேரூராட்சி ஊழியர் ஒருவர் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்துள்ளார்.

தேங்கியுள்ள கழிவு நீரால் பல நோய்த் தொற்று அபாயம் இருப்பதை பேரூராட்சி நிர்வாகம் உணர்ந்தும் அந்த பணியினை செய்யும் ஊழியர்களுக்கு எவ்வித பாதுகாப்பு உபகரணமும் அளிக்கவில்லை.  இது போன்ற பொறுப்பற்ற செயலில் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருவது வேதனை அளிப்பதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க:பில் கலெக்டரை தாக்கிய திமுக நகர்மன்ற உறுப்பினர்!