ஒபிஎஸ் கூறிய கதை சசிகலாவிற்கு பொருந்தாது.....ஜெயக்குமார்....!!

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் குட்டிக்கதை சசிகலாவிற்கு பொருந்தாது, பாமர மக்களுக்கான கதை என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

ஒபிஎஸ் கூறிய கதை சசிகலாவிற்கு பொருந்தாது.....ஜெயக்குமார்....!!

சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், கூறுகையில்,

சிறுபான்மையினரை உணர்வுப் பூர்வமாக நேசிக்கும் இயக்கம் அதிமுக, பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து இந்தியாவில் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டனர் என்றும், அப்போது அதிமுக அரசு தமிழகத்தில் முழுமையான பாதுகாப்பு வழங்கி சிறுபான்மையினரை காத்தது என்றார்.

 கட்சி சார்பில் ரமலான் நோன்பு திறந்து , கிறிஸ்துமஸ் பெருவிழா நடத்தும் ஒரே கட்சி அதிமுக என கூறிய அவர், மனித குலம் தோன்றியது முதல் தவறிழைத்தல் இயல்பு, ஆனால் திருந்தி வாழ்வது மனித குலத்தின் சிறப்பு என கூறினார்.

மேலும் சசிகலாவிற்கு மன்னிப்பே கிடையாது என்பதில் ஒருங்கிணைப்பாளரும் உறுதியாகவே இருக்கிறார். சசிகலா இணைப்பு அர்த்தத்தில்  ஓபிஎஸ் குட்டிக் கதை கூறவில்லை. சசிகலாவை சேர்க்க கூடாது என கட்சியினர் அனைவரும் ஒரே எண்ணத்தில் இருக்கிறோம் என்றார்

ஓபிஎஸ் கூறிய கதைக்கு கண் காது மூக்கு வைத்து உருவம் கொடுக்காதீர். அந்த கதை பாமரர்களுக்கே பொருந்தும் , சசிகலாவுக்கு பொருந்தாது என கூறிய அவர், சசிகலா இணைப்பு குறித்த அதிமுக உட்கட்சி விவகாரத்தில் அண்ணாமலை கருத்து கூறக் கூடாது, கருத்து கூறினால் அது தவறு என குற்றம் சாட்டினார்.

மீனவர் கைது உட்பட எந்த ஜீவாதார பிரச்சனை குறித்தும் நாடாளுமன்றத்தில்  திமுகவினர் பேசவில்லை, டெல்லியில் போண்டா, பஜ்ஜி சுண்டல் சாப்பிட்டு உல்லாசமாக இருக்க தமிழக மக்கள் அவர்களை அனுப்பவில்லை, இதை திமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும். மேற்கொண்டு மீனவர் கைது நடவடிக்கை இல்லாதவாறு மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.