போலீஸ் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம்...! காவல்துறையினர் விசாரணை..!

புதுக்கோட்டையில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

போலீஸ் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம்...! காவல்துறையினர் விசாரணை..!

புதுக்கோட்டை அழகர் நகர் பகுதியில் வசித்து வருபவர் கோபிநாத். இவர் ஆயுதப்படையில் காவல் ஆய்வாளராக உள்ளார். இவர் கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். பின்னர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல் ஆய்வாளர் கோபிநாத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அவர் கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த டவுன் டிஎஸ்பி ராகவி, கணேஷ் நகர் காவல் ஆய்வாளர் ஜாபர் ஆகியோர் கொள்ளை நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

காவல் ஆய்வாளர் கோபிநாத், வீட்டில் இருந்து சுமார் 10 சவரன் தங்க நகைகள் மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.