ஏ.டி.எம் மையத்தில் புகுந்த கொள்ளையர்கள்..கண்காணிப்பு கேமிரா உடைப்பு....அலாரம் அடித்ததால் அலறியடித்து ஓட்டம்....!!

சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அருகே உள்ள ஏடி.எம் மையத்தில் புகுந்த கொள்ளையர்கள், கண்காணிப்பு கேமிராவை உடைத்து, பணம் திருட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.டி.எம் மையத்தில் புகுந்த கொள்ளையர்கள்..கண்காணிப்பு கேமிரா உடைப்பு....அலாரம் அடித்ததால் அலறியடித்து ஓட்டம்....!!

சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அருகே உள்ள கீழ் மணம்பேடு கிராமத்தில் இந்தியா 1 வங்கி ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் அதிகாலையில் புகுந்த மர்ம நபர்கள் மையத்தில் உள்ளேயும் வெளியேயும் இருந்த கண்காணிப்பு கேமிராவை அடித்து நொறுக்கி பணத்தை திருட முயற்சித்தனர்.

அப்போது கண்காணிப்பு கேமிராவை உடைக்கும் போது அலாரம் அடித்ததால் அதிர்ந்த கொள்ளையர்கள், பணம் திருடும் முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த வங்கி ஏ.டி. ஏம் க்கு காவலாளிகள் இல்லை என்பது குறிப்பிடதக்கது.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், வழக்குபதிவு செய்து தடயங்களை சேகரித்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...