தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளன.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!!

12ம் வகுப்புப் பொதுத்தேர்வு கடந்த மே 5ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரையிலும் 10ம் வகுப்பு தேர்வுகள் மே 6ம் தேதி தொங்கி 30ம் தேதி வரையிலும் நடைபெற்றது. தொடர்ந்து சுமார் 16 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்று தேர்வெழுதினர்.

இந்நிலையில், நாளை காலை 9. 30 மணிக்கு ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளும், 12 மணிக்கு 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து அரசு வெளியிட்டுள்ள இணையதளங்களின் மூலமும், பள்ளியில் சமர்பிக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தி வாயிலாகவும் மாணவர்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.