103 ரூபாயை நெருங்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை... டீசல் லிட்டருக்கு 33 காசுகள் அதிகரிப்பு...

சென்னையில்  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து 103 ரூபாயை நெருங்கியுள்ளது.

103 ரூபாயை நெருங்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை... டீசல் லிட்டருக்கு 33 காசுகள் அதிகரிப்பு...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தனியார் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னையிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்தது. 

தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் சற்றே ஆறுதல் அடைந்திருந்த மக்கள், பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்து 103 ரூபாயை நெருங்கி வருவதால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவது மக்களுக்கு வாழ்வாதார சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு எதிரொலியாக மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.  

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து 102 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து 98 ரூபாய் 26 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது வாகன ஓட்டிகளை கலக்கமடைய செய்துள்ளது.