நகராட்சி ஆணையரை கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள்...!

நகராட்சி ஆணையரை கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள்...!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். திட்டக்குடி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் தினந்தோறும் தங்களது அத்தியாவசிய பணிகளுக்கு திட்டக்குடி வந்து செல்கின்றனர். இந்நிலையில் திட்டக்குடி பேருந்து நிலையம், பெரியார் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெறிநாய்கள் சுற்றி திரிந்து பலரை கடித்து வருகிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்திச் செல்லும் இந்த நாய்களால் பலர் நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கின்றனர். 

இது குறித்து நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் பலமுறை வெறி நாய்களை பிடிக்க வேண்டுமென மனு வழங்கியும் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெரியார் நகர் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திட்டக்குடி போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்