தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் வெறும் வாய் சவுடால் மட்டுமே விடுகின்றன - அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் வெறும் வாய் சவுடால் மட்டுமே விடுகின்றன - அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகள் வெறும் வாய் சவுடால் விட்டுக் கொண்டிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். 

தமிழ்நாடு பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் பத்து லட்சம் மரக்கன்றுகள் நடும் சுவாசம் திட்டம் சென்னை பாலவாக்கத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தை மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். அதில் முதல் மரக்கன்றை மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் குடும்பத்தை சேர்ந்த சலீம் நட்டு வைத்தார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, எங்கள் கட்சி அனைத்தையும் செயல் மூலம் செய்து காட்டுவதாகவும், ஆனால், தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகள் வெறும் வாய் சவுடால் விட்டு கொண்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். 

இதையும் படிக்க : மீண்டும் பெண்களை உவமைபடுத்தியே பேசும் சைதை சாதிக்...

தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி எப்படி பாஜகவின் பிரச்சார பீரங்கியாக இருந்தாரோ, அதே போல ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் பாஜகவின் பிரச்சார பீரங்கியாக இருப்பார் என்று அண்ணாமலை தெரிவித்தார்.