பச்சிளம் குழந்தையை ஏரியில் வீசி சென்ற பெற்றோர்

திருவண்ணாமலை மாவட்டம் அருகே பிறந்து ஒரு மணி நேரமான ஆண் குழந்தையை பெற்றோர்கள் ஏரியில் வீசி சென்ற கொடூரம் சம்பவம் அறங்கேறியுள்ளது.

பச்சிளம் குழந்தையை ஏரியில் வீசி சென்ற பெற்றோர்

வந்தவாசி அடுத்த மேல்புதூர் கிராமத்தில் உள்ள ஏரி அருகே முட்புதரில் பிறந்து ஒரு மணி நேரம் ஆன ஆண் குழந்தை உயிருடன் அழுது கொண்டிருந்தது அப்போது அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் குழந்தை அழுதுக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து பெரணமல்லூர் காவல் நிலைய போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆண் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம்  செய்யாறு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பிறந்து ஒரு மணி நேரம் ஆன குழந்தையை வீசி சென்ற பெற்றோர்களைத் தேடி வருகின்றனர்.