சென்னை வந்தடைந்தார் புதிய ஆளுநர்...  நாளை ஆளுநராகப் பதவியேற்கிறார் ஆர்.என்.ரவி ...

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள  ஆர்.என்.ரவி, சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் அவரை வரவேற்றனர்.

சென்னை வந்தடைந்தார் புதிய ஆளுநர்...  நாளை ஆளுநராகப் பதவியேற்கிறார் ஆர்.என்.ரவி ...

தமிழக ஆளுநராக, கடந்த 4 ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் ஆளுநராக மாற்றப்பட்ட நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

இந்நிலையில், தமிழக ஆளுநராகப் பதவியேற்க உள்ள ஆர்.என் ரவி, நேற்றிரவு சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, எ.வ.வேலு, க.பொன்முடி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். 

தமிழகத்தின் புதிய ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, நாளை முறைப்படி பதவியேற்க உள்ளார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, சஞ்சிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.