தாய், தந்தைக்கு கோவில் கட்டி சிலை வைத்த மகன்... 

தாய் தந்தைக்கு கோவில் கட்டி சிலை எழுப்பி கிடா விருந்து வைத்த மகனின் செயல் கிராம மக்களை நெகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளது.

தாய், தந்தைக்கு கோவில் கட்டி சிலை வைத்த மகன்... 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தாய்-தந்தைக்கு கோவில் கட்டி சிலை அமைத்து, மகன் ஒருவர் கிடா விருந்து படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடுமலை அருகேயுள்ள தீபாலபட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது தந்தை மாரிமுத்து மற்றும் தாய் பாக்கியம் ஆகியோர் இறந்து சுமார் 10ஆண்டுகள் ஆகின்றன.

 

இந்நிலையில் தாய்-தந்தை நினைவாக இருவருக்கும் கோவில் கட்டி சிலை எழுப்பியுள்ளார். இந்த கோவில் திறப்பு விழாவில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில், ஊர் மக்களை அழைத்து கிடா விருந்து வைத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்திலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.